கீழையூரில் இன்று மின்தடை

திருக்கோவிலுார் : வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 10:00 மணிக்கு மேல் தேரோட்டம் துவங்குகிறது. முன்னதாக தேர் வலம் வரும் பகுதிகள் முழுவதும், மின்சாரம் நிறுத்தப்படும் எனவும், தேர் நிலையை அடைந்த பிறகு மின்விநியோகம் செய்யப்படும் என மின்துறை தெரிவித்துள்ளது.

Advertisement