செங்கல்பட்டு:புகார் பெட்டி; 20 ஆண்டாக கொட்டப்படும் குப்பை கண்டுகொள்ளாத இரு நிர்வாகங்கள்

20 ஆண்டாக கொட்டப்படும் குப்பை கண்டுகொள்ளாத இரு நிர்வாகங்கள்
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, 3வது வார்டில், செல்லியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவின் நுழைவு பகுதியில், ரயில் தண்டவாளம் அருகே, கடந்த 20 ஆண்டுகளாக குப்பை கொட்டப்படுகிறது.
இதனால், தெருவாசிகளும், ரயில் நிலையம் செல்லும் பயணியரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இங்கே எவரும் குப்பை கொட்டாதபடி, ஊராட்சி மற்றும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த 20 ஆண்டுகளாக புகார் அளித்தும், இரண்டு துறையினரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட இரு துறைகளின் உயரதிகாரிகளும் உரிய கவனம் எடுத்து, இந்த இடத்தில் யாரும் குப்பை கொட்டாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.இஸ்மாயில், ஊரப்பாக்கம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு
-
ஏப்ரல் 30ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்; அறிவித்தார் அப்பாவு!
-
பாகிஸ்தான் பற்றி உலகுக்கே தெரியும்; ரயில் கடத்தலில் பழிசுமத்தியதற்கு இந்தியா பதிலடி
-
சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார்: ரூ.ஆயிரம் கோடி முறைகேடு புகாருக்கு செந்தில்பாலாஜி பதில்
-
ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை; தண்டனையை உறுதிசெய்தது ஐகோர்ட்
-
தமிழக பட்ஜெட்; தலைவர்கள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement