திருவாடானை தொகுதியில் 29 புதிய ஓட்டுச்சாவடிகள்
திருவாடானை: திருவாடானை சட்டசபை தொகுதியில் 29 ஓட்டுச்சாவடிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுஉள்ளது. அதற்கான பணிகள் நடக்கிறது.
திருவாடானை சட்டசபை தொகுதியில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 971 ஆண்கள், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 311 பெண்கள், 3 திருநங்கைகள் என 3 லட்சத்து 18 ஆயிரத்து 37 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இத்தொகுதியில் 347 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டுச்சாவடிகளை அதிகரிக்கும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது:
அதிகரிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஓட்டுச்சாவடிகளை அதிகரிக்கும் திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. ஒரு ஓட்டுச்சாவடியில் 1200 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால், அதை இரண்டாக பிரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
திருவாடானை சட்டசபை தொகுதியில் ஏற்கனவே 347 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. தற்போது இந்த ஓட்டுச்சாவடிகள் 376 வரை அதிகரிக்கும். அதன்படி புதிதாக அமைக்கப்படவுள்ள 29 ஓட்டுச்சாவடிகள் குறித்து ஆய்வு பணிகள் நடக்கிறது என்றனர்.
மேலும்
-
வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
போர் நிறுத்தத்தை தடுப்பது பேரழிவை ஏற்படுத்தும்; ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!
-
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!