மஞ்சுவிரட்டு ஆலோசனை கூட்டம்

திருப்புத்துார்: திருப்புத்துார் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ள நான்கு மஞ்சுவிரட்டு குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

என்.புதுாரில் மார்ச் 14, நெடுமரத்தில் மார்ச் 24 மற்றும் 30, குமாரப்பேட்டையில் ஏப்.3 தேதிகளில் கோயில் விழாக்களை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளது. பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்க நடந்த கூட்டத்திற்கு துணைத்தாசில்தார் மாரியப்பன் தலைமை வகித்தார். வருவாய்த்துறை, போலீசார், சுகாதாரத்துறையினர், தீயணைப்பு துறை, வளர்ச்சித் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement