சிவகங்கையில் மார்ச் 15ல்வேலைவாய்ப்பு முகாம்
சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் மார்ச் 15 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது,வேலைவாய்ப்பு முகாம் அன்று காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெறும். இதில், 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் 5,000 காலிபணியிடத்திற்கு இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில், எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். இதில், பங்கேற்க விரும்புவோர் தன் சுயவிபரத்துடன், கல்வி சான்று, ஆதார் அட்டை நகலுடன் முகாமில் பங்கேற்கலாம்.
வேலை தேடுவோர் மற்றும் தனியார் நிறுவனங்கள் முகாமில் பங்கேற்க www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இம்மாவட்டத்தை சேர்ந்த வேலையில்லாத இளைஞர்கள் முகாமில் பங்கேற்று தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறலாம், என்றார்.
மேலும்
-
வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
போர் நிறுத்தத்தை தடுப்பது பேரழிவை ஏற்படுத்தும்; ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!
-
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!