இளையான்குடியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

இளையான்குடி: இளையான்குடி டாக்டர்சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் கீழாயூர் கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.

பேரூராட்சி தலைவர்நஜூமுதீன் துவக்கி வைத்தார். முதல்வர் ஜபருல்லாகான், துணை முதல்வர் முஸ்தாக் அகமது கான், கவுன்சிலர் சேக் அப்துல் ஹமீத்,கிராம பிரமுகர் உமர், உதவி பேராசிரியர் அப்துல் ரஹீம்,உடற்கல்வி இயக்குனர் காளிதாசன், தீயணைப்பு நிலைய மேலாளர் அருள்ராஜ், தொழில் மேம்பாட்டுக்கழக ஒருங்கிணைப்பாளர் நாசர், சுகாதார ஆய்வாளர் வினோத்குமார் பேசினர்.

Advertisement