ஊராட்சி செயலர்கள் தர்ணா: 270 பேர் தற்செயல் விடுப்பு

சிவகங்கை: கிராம ஊராட்சி செயலர்களுக்கு முறையான காலமுறை சம்பளம் வழங்கி, பென்ஷன் திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி சிவகங்கையில் தமிழ்நாடு ஊராட்சி செய லர்கள் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான சலுகைகளை ஊராட்சி செயலர்களுக்கும் அறிவிக்க வேண்டும்.
முறையான கால முறை சம்பளத்துடன், பென்ஷன் திட்டத்திலும் ஊராட்சி செயலர்களை சேர்க்க வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பாக்கியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட நிர்வாகிகள் ராமநாதன், அஞ்சுகம், மஞ்சுளா, மாநில நிர்வாகி மீனாட்சி மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நேற்றைய போராட்டத்தில் மாவட்ட அளவில் உள்ள 445 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் கிராம ஊராட்சி செயலர்களில் 270 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும்
-
சிறையில் போதை பொருட்களை கண்டுபிடிக்க மோப்ப நாய் படை
-
பொறியியல் கல்லுாரிகளில் விரைவில் 2,000 பேர் நியமனம்
-
ரன்யா வீடு உட்பட 9 இடங்களில் 'ரெய்டு' அமலாக்க துறையும் களம் இறங்கியதால் பரபரப்பு
-
பி.டி.ஓ., தேர்வு முடிவு விரைவில் வெளியீடு மேல்சபையில் அமைச்சர் பிரியங்க் கார்கே உறுதி
-
வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்த கமிட்டி மேல்சபையில் அரசு - எதிர்க்கட்சிகள் காரசாரம்
-
மாமனார், மாமியாரை தாக்கிய பெண் டாக்டர் வீடியோ வைரல்