காரைக்காலில் 6.5 செ.மீ., மழை

காரைக்கால்: காரைக்காலில் பெய்த கன மழையால் திருநள்ளாறு கடை வீதியில் மழைநீர் தேங்கியது.

காரைக்கால் மாவட்டத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தது. ஆனால், நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரை காரைக்காலில் மழை அளவு 6.5 செ.மீ., ஆக பதிவாகியது.

நேற்று காலை முதல் மதியம் வரை தொடர்ந்து மழை பெய்தது. நெடுங்காடு, திருப்பட்டினம், திருநள்ளாறு, கோட்டுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கன மழை கொட்டியது. திருநள்ளார் கடை வீதிகளில் கழிவுநீர் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு, மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றது. குப்பை அகற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதால், உள்ளூர் பணியாளர்கள் கொண்டு மழைநீர் வெளியேற்றும் பணி நடந்தது.

Advertisement