முதல்வர் மருந்தகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், 17 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அம்மருந்தகங்களில் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு நடத்திவருகிறார்.
அவ்வகையில், நேற்று வெள்ளியங்காடு பகுதியில் உள்ள மருந்தகத்துக்கு சென்ற கலெக்டர், மருந்து இருப்பு, அனைத்து மருந்துகளும் உள்ளனவா, விலை விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
'முதல்வர் மருந்தகங்களில், 25 முதல் 90 சதவீத தள்ளுபடி விலையில் ஜெனிரிக் மருந்துகள் மற்றும் பிரான்டட் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடியை பயன்படுத்தி, மக்கள் குறைவான விலையில் மருந்துகள் வாங்கி பயன்பெறவேண்டும்' என, கலெக்டர் தெரிவித்தார்.
திருப்பூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் சரவணக்குமார் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; இருவர் கைது
-
வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
போர் நிறுத்தத்தை தடுப்பது பேரழிவை ஏற்படுத்தும்; ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!
-
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்
Advertisement
Advertisement