அறிவியல் துளிகள்

1. பூகம்பம் ஏற்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. சூரியனின் வெப்பமும் கூட பூகம்பத்திற்கு ஒரு காரணம் என்று ஜப்பானிய புவியலாளர்கள் ஆய்வுப்பூர்வமாக நிறுவியுள்ளனர்.
2. பொ.யு. 79இல் இத்தாலியில் வெசுவியஸ் எரிமலை வெடித்து பாம்பெய் நகரம் அழிந்ததை நாம் வரலாற்றில் படித்திருப்போம். இந்த வெடிப்பின்போது இறந்த ஒருவரின் உடலில், அதீத வெப்பத்தால் மூளை கருப்பு நிறக் கண்ணாடியாக மாறி இருப்பதைச் சமீபத்தில் அங்கு ஆய்வுசெய்த தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
3. ப்ரோக்கோலியில் உள்ள சல்ஃபொராபேன் (Sulforaphane) எனும் சேர்மம் வகை 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று சுவீடன் நாட்டில் உள்ள கோதன்பர்க் பல்கலை கண்டறிந்துள்ளது.
4. புவி வெப்பமயமாதலால் கடல் மட்ட உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். சமீபத்தில் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆல்டோ பல்கலை, புவிவெப்பம் அதிகரிப்பதால் உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தனது ஆய்வில் கூறியுள்ளது.
5. அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை உடைய துரித உணவுகளை உண்பது பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் என்பதை அறிவோம். சமீபத்திய ஓர் ஆய்வில் துரித உணவுகள் வயதாவதை விரைவுப்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும்
-
பாகிஸ்தான் பற்றி உலகுக்கே தெரியும்; ரயில் கடத்தலில் பழிசுமத்தியதற்கு இந்தியா பதிலடி
-
சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார்: ரூ.ஆயிரம் கோடி முறைகேடு புகாருக்கு செந்தில்பாலாஜி பதில்
-
ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை; தண்டனையை உறுதிசெய்தது ஐகோர்ட்
-
தமிழக பட்ஜெட்; தலைவர்கள் சொல்வது என்ன?
-
மத்திய அரசு நிதியை விடுவிக்கும்: சிதம்பரம் நம்பிக்கை
-
மீண்டும் ஈட்டிய விடுப்பு சரண்டர்: அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கை ஏற்பு!