குப்பை குவிந்த அனுமந்தபுரம் குளம் துாய்மைப்படுத்த பக்தர்கள் கோரிக்கை

மறைமலைநகர்:சிங்கபெருமாள்கோவில் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற அகோர வீரபத்திரர் சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலின் எதிரே, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளம் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் குளத்தில் குளித்து விட்டு, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
தற்போது குளத்தில் உள்ள தண்ணீரில் பிளாஸ்டிக் குப்பை, எலுமிச்சை பழம் மாலைகள் உள்ளிட்டவற்றை வீசிச் செல்கின்றனர். குளத்தில் தண்ணீர் குறைவாக உள்ளதால், குளம் முழுதும் குப்பை குவிந்து காணப்படுகிறது. மேலும் குளத்தை சுற்றி புற்கள் முளைத்து உள்ளதால், அதில் பாசி படிந்து காணப்படுகிறது.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:
இந்த கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி, சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய நாட்களில் பரிகாரம் செய்ய வருவோர், தங்களின் உடைகளை குளத்தில் உள்ள தண்ணீரில் வீசிச் செல்கின்றனர்.
ஆண்டுதோறும் மஹாளய அமாவாசை தினத்தன்றும், குளத்தில் குப்பை குவிகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, குளத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
தமிழக பட்ஜெட்; தலைவர்கள் சொல்வது என்ன?
-
மத்திய அரசு நிதியை விடுவிக்கும்: சிதம்பரம் நம்பிக்கை
-
மீண்டும் ஈட்டிய விடுப்பு சரண்டர்: அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கை ஏற்பு!
-
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில் திருப்பணிக்கு ரூ.125 கோடி!
-
சூலூர், பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா; மதுரை, கடலுாரில் காலணி தொழிற்பூங்கா!
-
ராமேஸ்வரத்தில் விமான நிலையம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!