இன்று கூட்டுறவு துறைபணியாளர் நாள் கூட்டம்


இன்று கூட்டுறவு துறைபணியாளர் நாள் கூட்டம்


கரூர்:கரூர் மாவட்டத்தில், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர் நாள் கூட்டம் இன்று (14) மதியம், 3.00 மணியளவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடக்கிறது. பணியாளர்கள் தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை http:/rcs.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவிட இயலாதவர்கள், கூட்டத்தின் போது விண்ணப்பங்களை நேரடியாக
வழங்கலாம். எனவே, கூட்டுறவு துறையில் பணிபுரிந்துவரும் அனைத்து பணியாளர்களும், ரேஷன் கடை விற்பனையாளர்கள், கட்டுனர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் பங்கேற்கலாம். இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Advertisement