செங்குத்தாக கவிழ்ந்த கேரளா பஸ்

மூணாறு :கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில், அடிமாலி அருகே கேரள அரசு பஸ் தேவியாறு ஆற்றில் கவிழ்ந்தது.
தமிழகம் உடுமலைபேட்டையில் இருந்து மூணாறு வழியாக எர்ணாகுளத்திற்கு கேரள அரசு பஸ் நேற்று முன்தினம் மாலை சென்றது. பஸ்சில் 16 பயணியர் இருந்தனர்.
கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி அருகே இரும்பு பாலம் செராயிபடி பகுதியில் மாலை 6:45 மணிக்கு பஸ் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தேவியாறு ஆற்றில் செங்குத்தாக கவிழ்ந்தது.
அதில் டிரைவர் உட்பட ஒரு சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்ட நிலையில் அனைவரும் உயிர் தப்பினர்.
அப்பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடக்கும் நிலையில், மழை பெய்ததால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதாக தெரிய வந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னையில் நாய் கடித்ததில் வடமாநில தொழிலாளி பலி!
-
கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம்; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
-
காரைக்குடியில் பழிக்குப்பழி கொலை செய்ய சதி; ஆயுதங்களுடன் சிக்கிய 4 பேர்
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 சரிவு
-
5 ஆண்டுகளில் 100 புலிகளை கொன்ற பவேரியா கொள்ளை கும்பல்; விசாரணையில் பகீர்
-
பாக்., காஷ்மீர் நிலைப்பாட்டை ஏற்க முடியாது; ஐ.நா.,வில் இந்தியா திட்டவட்டம்
Advertisement
Advertisement