சென்னையில் நாய் கடித்ததில் வடமாநில தொழிலாளி பலி!
சென்னை: சென்னை அருகே நாய் கடித்ததில் வடமாநில தொழிலாளி பலியானார்.
தமிழகத்தில் தினமும் பலர் தெருநாய் கடிக்கு ஆளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர். நகரில் ஆங்காங்கே சுற்றித்திரியும் தெருநாய்கள் குழந்தைகள், பெரியவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறி உள்ளது. தற்போது சென்னை அருகே நாய்க்கடித்ததில் ஒருவர் பலியான விவரம் வெளியாகி இருக்கிறது.
வானகரம் பகுதியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி ஷேக் என்பவரை அங்குள்ள தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. காயம் அடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் அதற்கென ஊசி போட்டுள்ளார்.
இந் நிலையில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட ஷேக், திடீரென உயிரிழந்துள்ளார். நாய்க்கடியால் ஒருவர் பலியான விவரம் அறிந்த சுகாதாரத்துறையினரும், மாநகராட்சித்துறையினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெருவில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
பா.ஜ. தலைவர் சுட்டுக்கொலை; நிலத்தகராறில் அண்டை வீட்டுக்காரர் ஆத்திரம்
-
5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வழிவகை; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
-
மக்காச்சோள உற்பத்தியை மேம்படுத்த ரூ. 40 கோடி ஒதுக்கீடு; பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு
-
கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம்; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
-
காரைக்குடியில் பழிக்குப்பழி கொலை செய்ய சதி; ஆயுதங்களுடன் சிக்கிய 4 பேர்
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 சரிவு