பென்ஷனர்கள் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கடலுார்; கடலுாரில் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். துணைத் தலைவர் பக்கிரி, துணை செயலாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் ராமசாமி துவக்க உரையாற்றினார். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச பென்ஷன்
9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சிறப்பு தலைவர் மருதவாணன், வங்கி ஓய்வூதியர்கள் சங்க தலைவர் ரமணி, காசிநாதன், ராமலிங்கம், சிவசிதம்பரம், ரத்தின ராமசாமி, கிருஷ்ணசாமி, கிருஷ்ணமூர்த்தி, பழனிசாமி, சுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனைவியின் ஆபாச அரட்டையை சகிக்க முடியாது: விவாகரத்து வழக்கில் ஐகோர்ட் கருத்து
-
ரூபாய் குறியீடு சர்வதேச போட்டிக்கானது: பா.ஜ., சீனிவாசன் விளக்கம்
-
கால்நடைத்தீவனம், எத்தனால் உற்பத்திக்கு உகந்த மக்காச்சோளம்; நிதி ஒதுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
-
எடியூரப்பாவிடம் விசாரிக்க ஐகோர்ட் தடை 'போக்சோ' வழக்கில் தற்காலிக நிம்மதி
-
பழங்குடியினர் மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டுக்கு வரவேற்பு
-
தடப்பள்ளி வாய்க்கால் ஷட்டர் கான்கிரீட்மேடையில் விரிசல்
Advertisement
Advertisement