தாம்பரம் மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.3.90 கோடியில் கூடுதல் கட்டடம்
தாம்பரம்,
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றப்படுகின்றன.
அந்த வகையில், நான்காவது மண்டலம், இரும்புலியூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில், மாணவர்களின் வசதிக்காக, 60 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு வகுப்பறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இறுதி தேர்வு முடிந்து விடுமுறை விட்டவுடன், இப்பணி துவங்கப்படவுள்ளது.
இதேபோல், பெருங்களத்துாரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், 60 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு வகுப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
மேலும், அங்குள்ள பழைய கட்டடங்களுக்கு வர்ணம் பூசுதல், கதவு, ஜன்னல்களை மாற்றுதல் என, 60 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளது.
மேற்கு தாம்பரம், கல்யாண் நகர் மேல்நிலைப் பள்ளியில், 1.20 கோடி ரூபாய் செலவில், நான்கு வகுப்பறைகளும், பழைய கட்டடம், 60 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட உள்ளன.
பீர்க்கன்காரணை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், 60 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு வகுப்பறைகள் கட்டப்படவுள்ளன.
மேலும்
-
மனைவியின் ஆபாச அரட்டையை சகிக்க முடியாது: விவாகரத்து வழக்கில் ஐகோர்ட் கருத்து
-
ரூபாய் குறியீடு சர்வதேச போட்டிக்கானது: பா.ஜ., சீனிவாசன் விளக்கம்
-
கால்நடைத்தீவனம், எத்தனால் உற்பத்திக்கு உகந்த மக்காச்சோளம்; நிதி ஒதுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
-
எடியூரப்பாவிடம் விசாரிக்க ஐகோர்ட் தடை 'போக்சோ' வழக்கில் தற்காலிக நிம்மதி
-
பழங்குடியினர் மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டுக்கு வரவேற்பு
-
தடப்பள்ளி வாய்க்கால் ஷட்டர் கான்கிரீட்மேடையில் விரிசல்