செஸ்: விதித் அபாரம்

புதுடில்லி: 'பிரீஸ்டைல்' செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு இந்தியாவின் விதித் குஜ்ராத்தி தகுதி பெற்றார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் 'பிரீஸ்டைல்' செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடத்தப்படுகிறது. பிப். 7 முதல் டிச. 13 வரை 6 தொடர்கள் நடக்கும். முடிவில் அதிக புள்ளி பெற்ற வீரர் சாம்பியன் ஆவார். இதன் இரண்டாவது தொடர் ஏப். 7-14ல் பாரிசில் நடக்கவுள்ளது.
உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சன் உட்பட 11 பேர் பங்கேற்கின்றனர். 12வது வீரரை தேர்வு செய்ய, ஆன்லைன் வழியாக போட்டி நடந்தது.
இதன் 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் விதித் குஜ்ராத்தி, முன்னாள் உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரென் மோதினர். இதில் விதித் 1.5-05 என வென்றார். காலிறுதியில் இந்தியாவின் பிரனவ், அரையிறுதியில் ஈரானின் அமினை வீழ்த்தினார். பைனலில் விதித், ஹங்கேரியின் ரிச்சர்டு ராப்போர்ட் மோதினர்.
இதில் 1.5-05 என்ற கணக்கில் விதித் பெற்று முதலிடம் பிடித்தார். இவருக்கு ரூ. 8.7 லட்சம் பரிசு கிடைத்தது. தவிர, 'பிரீஸ்டைல்' செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரில் பங்கேற்கவும் தகுதி பெற்றார்.
மேலும்
-
பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
-
ரூ. 3.5 கோடியில் வில்லிப்பாக்கம் சாலை விரிவாக்கம்
-
நிறைவடையும் சைக்கிள் பேரணி அமித் ஷா 31ல் குமரி வருகிறார்
-
உழவர் சந்தை மேம்பாடு, நெல் தொகுப்பு திட்டம்விவசாய சங்க நிர்வாகிகள் வரவேற்பு
-
ரூ.99 லட்சம் மோசடி: மேலும் 3 பேர் கைது
-
தனி அடையாள எண் பதிவுதுரிதப்படுத்த 18ல் முகாம்