கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை முடங்க வாய்ப்பு

பெங்களூரு; கர்நாடகாவில் நாளை (மார்ச் 22) முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கன்னட ஆதரவு அமைப்புகள் போராட்டம் அறிவித்து இருந்தாலும் கல்வி நிலையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அண்மையில் பெலகாவில் மராத்தி மொழி பேசுபவர்களால் கர்நாடக பஸ் கண்டக்டர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாளை (மார்ச் 22) மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டம் நடைபெறுகிறது.
முழு அடைப்பை மாநில அரசு ஆதரிக்காததால், கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் எப்போதும் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பஸ்கள், ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஓலா, உபர் டிரைவர்கள், ஆட்டோ ரிக்ஷா தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஓட்டல் மற்றும் திரைத்துறையினரும் போராட்டத்தை ஆதரித்துள்ளனர். முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பலத்த கண்காணிப்பும், போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
மேலும்
-
தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் போராடும் நிலையே ஏற்படவில்லை; அமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்
-
மகளிரணிக்கு போலீசார் மிரட்டல்போராட்டத்தை வாபஸ் பெற்ற பா.ஜ.,
-
நீரோடையில் கொட்டப்பட்ட ஆசிட் கலந்த கழிவு நீர்நிறம் மாறிய தடுப்பணை; செத்து மிதக்கும் மீன்கள்
-
மாநகராட்சிக்கு தினமும் 150 எம்.எல்.டி., குடிநீர் சப்ளை குழாய் உடைப்பை உடனுக்குடன் சீரமைக்க நடவடிக்கை
-
சுகாதார ஆய்வாளர் சங்ககூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
-
கிருஷ்ணராயபுரத்தில்கொசு ஒழிப்பு பணி