காஞ்சியில் வரும் 29ல் கிராம சபை கூட்டம்
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஒன்றியங்களிலும், 274 ஊராட்சிகளில், வரும் 22ம் தேதி, உலக தண்ணீர் தினத்தில், கிராம சபை கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டது.
ஆனால், நிர்வாக காரணங்களால், 23ம் தேதி, காலை 11:00 மணிக்கு, நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இரண்டாவது முறையாக ஒத்தி வைக்கப்படுவதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். வரும் 29ல், அனைத்து ஊராட்சிகளிலும், காலை 11:00 மணிக்கு, கிராம சபை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம சபை கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம்,பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தல்.
கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
மேலும்
-
மூதாட்டி கொலை வழக்கு வாலிபருக்கு 10 ஆண்டு சிறை; புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு
-
பிளாட் தருவதாக ரூ.8 லட்சம் மோசடி; ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் கைது
-
மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் பிரச்னை குறித்த சமாதான கூட்டம்
-
நத்ஹர்வலி தர்காவுக்கு பட்டுப்போர்வை திருச்சி சாரதாஸ் நிறுவனம் வழங்கல்
-
மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரி, விழுப்புரம், கடலுாரில் ஆலோசனை
-
அடமான நகையை மீட்க வாங்கிய ரூ.12 லட்சத்தை ஏமாற்றிய பெண்கள் கிருமாம்பாக்கம் போலீசார் விசாரணை