விழுப்புரம் ரயில் நிலையத்தில் 'எஸ்கலேட்டர்' தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்

விழுப்புரம்: 'விழுப்புரம் ரயில் நிலையத்தில், எஸ்கலேட்டர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவில் செய்யப்படும்' என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் சிங் தெரிவித்தார்.
விழுப்புரம் ரயில் நிலையம் பசுமை ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டு அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் சிங் நேற்று காலை ஆய்வு செய்தார்.
பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'பொதுமக்களின் தேவைக்கேற்க விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தேவைக்கேற்ப கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்படும். ரயில் டிக்கெட்டுகள் மொபைல் ஆப் மற்றும் வெண்டிங் மெஷின் மூலம் வழங்கப்படுவதால் அதனை ரயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் மின் துாக்கி படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது.
செப்டம்பர் மாதத்திற்குள் ரயில் நிலையம் முழுதும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்படும். பொதுமக்கள் பாதிக்காத வகையில் கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் செய்து தரப்படும்' என்றார்.
திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன், முதன்மை தலைமை பொறியாளர் ஜெகலோத், முதன்மை திட்ட மேலாளர் நஜீர் அகமது உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும்
-
'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டத்தின்கீழ் முன்னாள் படைவீரர்களுக்கு கடனுதவி
-
நவீன எரிவாயு தகன மேடை பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
-
மருத்துவ முகாம்
-
ஆபத்தான சாலை வளைவுகளில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
-
உத்திரமேரூர் ஒன்றியத்தில் அரசு கட்டடங்கள் திறப்பு
-
போதை மகனை போலீசில் பிடித்து கொடுத்த தாய் குடும்பத்துடன் கொல்வதாக மிரட்டியதால் ஆவேசம்