மயங்கி விழுந்து பெண் சாவு
செஞ்சி: செஞ்சி அடுத்த காட்டுசித்தாமூரை சேர்ந்தவர் சின்னதுரை மனைவி தனம், 32; கணவரை இழந்தவர். 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் மயங்கி விழுந்தார். உடன், கீழ்பென்னாத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே தனம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement