சின்னசேங்கல் தொடக்க பள்ளியில் ஆண்டு விழா


சின்னசேங்கல் தொடக்க பள்ளியில் ஆண்டு விழா

கரூர்:கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், சின்னசேங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் அன்புசெல்வம் தலைமை வகித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவக்குமார், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் நித்தியானந்தன் ஆகியோர் பரிசு வழங்கினர்.
இதையடுத்து, மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், பஞ்சாயத்து முன்னாள் தலைவர் அமராவதி பாண்டியன், பள்ளி மேலாண்மை குழு தலைவி கோவிந்தம்மாள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மோகன், சேங்கல் தபால் நிலைய அலுவலர் ஸ்ரீதர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement