மல்யுத்தம்: சுனில் ஏமாற்றம்

அம்மான்: ஆசிய 'சீனியர்' மல்யுத்த சாம்பியன்ஷிப் அரையிறுதியில் இந்திய வீரர் சுனில் குமார் தோல்வியடைந்தார்.
ஆசிய 'சீனியர்' மல்யுத்த சாம்பியன்ஷிப் நேற்று ஜோர்டானில் துவங்கியது. இந்தியா சார்பில் கிரிகோ ரோமன் (10), 'பிரீஸ்டைல்' பிரிவில் 20 (10 ஆண்+10 பெண்) என மொத்தம் 30 பேர் பங்கேற்கின்றனர். நேற்று கிரிகோ ரோமன் பிரிவில் போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான 87 கிலோ பிரிவில் இந்தியாவின் சுனில் குமார், காலிறுதியில் 10-1 என தஜிகிஸ்தானின் சுஹ்ரோப்பை வீழ்த்தினார். அடுத்து நடந்த அரையிறுதியில் 1-3 என ஈரானின் யாசின் யாஷ்டியிடம் தோல்வியடைந்தார்.
அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீனாவின் ஜியாசின் ஹுவாங்கை சந்திக்கிறார்.
மற்ற இந்திய வீரர்கள் நிதின் (55 கிலோ), உமேஷ் (63), சாகர் தக்ரான் (77), பிரேம் (130) தங்களது போட்டிகளில் தோல்வியடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தென் கொரியாவில் விடாது எரியும் காட்டுத்தீ: 18 பேர் பலி
-
ஹீரோ பைக்குகள் முன்பதிவு துவக்கம்
-
'ஒமேகா செய்கி என்.ஆர்.ஜி.,' இ.வி., ஆட்டோ குறைந்த எடை, அதிக ஆற்றல்
-
ஷைன் 100 ஹோண்டாவின் 'மைலேஜ் மாஸ்டர்'
-
ஸ்கிராம்பிளர் ஐகான் டார்க் டுகாட்டியின் 'பிளாக் ப்யூட்டி'
-
மெர்சிடிஸ் பென்ஸ் சி.எல்.ஏ., 10 நிமிட சார்ஜ், 300 கி.மீ., ரேஞ்ச்
Advertisement
Advertisement