புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது

விருத்தாசலம்: பெண்ணாடத்தில் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த, புதுச்சேரி மதுபாட்டில்களை கலால் போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
பெண்ணாடத்தில் புதுச்சேரி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், விருத்தாசலம் மதுவிலக்கு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பெண்ணாடம் ஏழுமலையான் நகரில் தனி வீட்டில் பதுங்கியிருந்த, பாரதிதாசன் தெரு ராஜேந்திரன் மகன் ரவிக்குமார், 42, என்பவரை பிடித்து விசாரனை நடத்தினர்.
அவர், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து, பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது.
அங்கிருந்து 750 மி.லி., மதுபாட்டில்கள் உட்பட 112 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப் பதிந்து, ரவிக்குமாரை கைது செய்தனர்.
மேலும்
-
பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டுஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை
-
மலை கிராமத்தில் கிராம சபை கூட்டம்
-
மத்திய அரசை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
-
அறிவிக்கப்படாத மின்வெட்டால் விவசாயிகள் அவதி
-
தண்ணீரை போற்றி பாதுகாக்க வேண்டும்தர்மபுரி கலெக்டர் சதீஸ் பேச்சு
-
அ.தி.மு.க., 5 இடத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு