சிவகுமார் படம் மீது பா.ஜ.,வினர் முட்டை வீச்சு

சிக்கமகளூரு : 'அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றுவோம்' என்று கூறிய, துணை முதல்வர் சிவகுமார் உருவப்படம் மீது, பா.ஜ., தொண்டர்கள் முட்டை வீசினர்.
'மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க, அரசியலமைப்பை மாற்றுவோம்' என, துணை முதல்வர் சிவகுமார் கூறியதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா, ராஜ்யசபாவில் கூறினார்.
இதையடுத்து சிவகுமாருக்கு எதிராக கர்நாடகாவில் பா.ஜ., தீவிர போராட்டம் நடத்தி வருகிறது. சிக்கமகளூரு டவுன் ஆசாத் பார்க் பகுதியில் நேற்று காலை பா.ஜ., தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். சிவகுமாரின் உருவப்படத்தை எரித்தனர்.
பின், பேலுார் சாலைக்கு சென்றனர். 'அன்னபாக்யா' திட்டம் தொடர்பான அரசு விளம்பர பேனர் இருந்தது. அதில் இடம் பெற்றிருந்த சிவகுமார் உருவப்படத்தின் மீது முட்டை வீசினர். அவர்களை போலீசார் அங்கிருந்து விரட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சம்பளப் பணம் விடுவிக்காதது ஏன்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழிக்க முயன்றவருக்கு எட்டரை ஆண்டு சிறை
-
கார் விலையை உயர்த்தக்கூடாது: நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
சிறுமிக்கு பாலியல் தொல்லை கூலி தொழிலாளி கைது
-
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 397 மாணவர்கள் 'ஆப்சென்ட்'
-
சோலார் நிறுவனத்தை எதிர்க்கும் மக்கள் மனு
Advertisement
Advertisement