காஞ்சிபுரம்: புகார் பெட்டி; குப்பை தொட்டியான தேசிய நெடுஞ்சாலை

குப்பை தொட்டியான தேசிய நெடுஞ்சாலை



சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஊனமலை அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் குப்பைகளை கொட்டி வருகின்றனர். வாகனங்களில் கொண்டு வரப்படும் குப்பைகளை, இரவு நேரங்களில் மர்ம நபர்களால் சாலை ஓரம் கொட்டப்படுகிறது. சிலர் தீயிட்டு எரித்து வருகின்றனர்.

அதனால், புகை ஏற்பட்டு, கண் எரிச்சலால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைகின்றனர்.

சாலையை ஒட்டி குப்பைகளை கொட்டாதவாறு தேசிய நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ம. கங்கா, அச்சிறுபாக்கம்.

Advertisement