பிளஸ்1 பொதுத்தேர்வு நிறைவு எளிதாக இருந்ததாக மகிழ்ச்சி
கோவை: பிளஸ்1 பொதுத் தேர்வு நேற்று நிறைவடைந்த நிலையில் மூன்று பாட தேர்வுகளும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த, 3 முதல், 25ம் தேதி வரை நடந்தது. பிளஸ்1 வகுப்புக்கு கடந்த, 5ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது. பிளஸ்1 தேர்வை, 366 பள்ளிகளை சேர்ந்த, 36 ஆயிரத்து, 664 மாணவர்கள், 128 மையங்களில் எழுதினர். நிறைவு நாளான நேற்று, வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் பாடங்கள் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டியவர் கைது
-
திடீர் நகர் குடியிருப்பு திட்டம் பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு
-
நடைபாதையில் பேனர் பாதசாரிகள் அதிருப்தி
-
மாநகராட்சி சொத்து வரி ரூ.2,000 கோடி வசூல்
-
போஜராஜ நகர் சுரங்க பாதையில் தேங்கிய கழிவு நீரால் தொற்று அபாயம்
-
சின்ன சேனியம்மன் கோவிலில் தீச்சட்டி திருவிழா கோலாகலம் படம் வரும் 3 காலம் இடம் விடவும்
Advertisement
Advertisement