மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

ஈரோடு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஈரோட்டில் நடந்தது.

வீட்டுமனை பட்டா, அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுக்கு கடனுதவி, பணி நியமனம், உயர் ஆதரவு தொகை, தொகுப்பு வீடுகள் உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 62 மனுக்கள் பெறப்பட்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கைக்கு அறிவுறுத்தினர். தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி சென்னையில் நடந்தது. இதற்கான தமிழக அணியில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த எட்டு பேர் பங்கேற்று முதல் பரிசை பெற்றனர். அவர்களை கலெக்டர் கவுரவித்தார். காசிபாளையம் பகுதியை சேர்ந்த நிர்மலா தேவி என்ற மாற்றுத்திறனாளிக்கு கைபேசி வழங்கப்பட்டது.

Advertisement