வர்ணம் பூசாத வேகத்தடை அச்சத்தில் வாகன ஓட்டிகள்

கடம்பத்துார்:திருவள்ளூர் - கடம்பத்துார் நெடுஞ்சாலையில் திருப்பாச்சூர், பிரையாங்குப்பம், கடம்பத்துார் அமைந்துள்ளது.
இந்த நெடுஞ்சாலையிலிருந்து விடையூர், சேலை, வெண்மனம்புதுார் ஆகிய பகுதிகளுக்கு ஒன்றிய சாலைகள் பிரிந்து செல்கின்றன.
இந்த நெடுஞ்சாலை வழியே, தினமும் 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இச்சாலையில் செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரத்தன் டாடா உயிலில் இருக்கும் ஒற்றை நிபந்தனை; 4,000 கோடி ரூபாய் சொத்து யார் யாருக்கு?
-
கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!
-
ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழு இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை
-
மஹாபாரதத்தில் வெற்றி யாருக்கு? எம்.எல்.ஏ., எத்னால் கேள்வி
-
விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ., போராட்டம்
-
டில்லியில் கர்நாடக பவன் முதல்வர் நாளை திறக்கிறார்
Advertisement
Advertisement