திருச்செந்துார் கோவிலில்  சிறப்பு தரிசனம் ரத்து

துாத்துக்குடி:'கோடை விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி இல்லை' என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு விடுமுறை நாட்களில் வரும் பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேல் நின்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில், கோடை விடுமுறை துவங்கி உள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இன்று முதல் வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் சிறப்பு தரிசன அனுமதி இல்லை என, கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள பொது தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம், முதியோர்களுக்கான தரிசனம் வழக்கம் போல் செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement