ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில் சிப்பந்திகள் உத்சவம் விமரிசை

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. ராமானுஜரின் அவதார தலமாக விளங்கும் இங்கு, ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி அமாவாசையொட்டி, தர்மகர்த்தாக்கள் மற்றும் கோவில் ஊழியர் ஒன்றினைந்து, சிப்பந்திகள் உத்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நேற்று, காலை 10:00 மணிக்கு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு ஆதிகேசவப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், பெருமாள் கேடயத்தி எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில், பெரிய வீதி உலா புறப்பாடு நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று ஆதிகேசவப் பெருமாளை வழிபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது அரசு பஸ்!
-
ரத்தன் டாடா உயிலில் இருக்கும் ஒற்றை நிபந்தனை; 4,000 கோடி ரூபாய் சொத்து யார் யாருக்கு?
-
கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!
-
சிமென்டிலிருந்து ஒயருக்கு மாறியது அதானி - பிர்லா குழுமங்களின் போட்டி
-
ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழு இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை
-
மஹாபாரதத்தில் வெற்றி யாருக்கு? எம்.எல்.ஏ., எத்னால் கேள்வி
Advertisement
Advertisement