கரும்பு ஜூஸ் கடையில் போதை பொருள் விற்றவர் கைது

ஸ்ரீபெரும்புதுார்,:ஸ்ரீபெரும்புதுார் அருகே, சுங்குவார்சத்திரம் அடுத்த, மொளச்சூர் பகுதியில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாக, சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, மொளச்சூர் கருமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள கரும்பு ஜூஸ் கடையில், போலீசார் நேற்றுமுன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், நான்கு கிலோ விமல்' எனும் போதை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளரான அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வின், 21, என்பவரை, கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது அரசு பஸ்!
-
ரத்தன் டாடா உயிலில் இருக்கும் ஒற்றை நிபந்தனை; 4,000 கோடி ரூபாய் சொத்து யார் யாருக்கு?
-
கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!
-
சிமென்டிலிருந்து ஒயருக்கு மாறியது அதானி - பிர்லா குழுமங்களின் போட்டி
-
ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழு இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை
-
மஹாபாரதத்தில் வெற்றி யாருக்கு? எம்.எல்.ஏ., எத்னால் கேள்வி
Advertisement
Advertisement