போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற விநாயகர் சிலை

ராமநாதபுரம்:-ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மேதலோடை கண்மாய் கரையில் திடீரென வைக்கப்பட்டிருந்த விநாயகர் கல் சிலையை போலீசார் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றனர்.மேதலோடை கண்மாய் கரையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் 2 அடி உயரமுள்ள விநாயகர் கற்சிலையை கொண்டு வந்து வைத்துள்ளனனர். இது குறித்து மேதலோடை கிராம மக்கள் திருப்புல்லாணி போலீசாருக்கு தெரிவித்தனர்.
திருப்புல்லாணி போலீசார் விநாயகர் சிலை குறித்து விசாரணை செய்தனர். யார் வைத்தது, எதற்காக வைக்கப்பட்டது என தெரியவில்லை. இதனால் சிலையை போலீசார் திருப்புல்லாணி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது அரசு பஸ்!
-
ரத்தன் டாடா உயிலில் இருக்கும் ஒற்றை நிபந்தனை; 4,000 கோடி ரூபாய் சொத்து யார் யாருக்கு?
-
கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!
-
சிமென்டிலிருந்து ஒயருக்கு மாறியது அதானி - பிர்லா குழுமங்களின் போட்டி
-
ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழு இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை
-
மஹாபாரதத்தில் வெற்றி யாருக்கு? எம்.எல்.ஏ., எத்னால் கேள்வி
Advertisement
Advertisement