புதுச்சேரி நகராட்சிக்கு குப்பை தொட்டி வழங்கல்

புதுச்சேரி : பிளாஸ்டிக் பார் சேன்ஞ் பவுண்டேஷன் சார்பில், புதுச்சேரி நகராட்சிக்கு 25 குப்பை சேகரிப்பு தொட்டிகள் நன்கொடையாகவழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பவுண்டேஷன் இயக்குனர் மோசஸ் அன்டர்வஸ் கலந்து கொண்டு குப்பை தொட்டிகளை, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமியிடம் வழங்கினார். இன்ஸ்பெக்டர் கீர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த குப்பை சேகரிப்பு தொட்டிகள் மூலம் புதுச்சேரியின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை சீராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement