ஆசிரியர் கூட்டணி கூட்டம்

காரைக்குடி : காரைக்குடியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் புரட்சித்தம்பி தலைமை ஏற்றார். மாநிலத் துணைத் தலைவர் ஆரோக்கியராஜ் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டியன் ஜீவா ஆனந்தி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வரும் மே 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் திண்டுக்கல்லில் மாநில மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பது, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement