மளிகை கடையில் திருடியவர் கைது

எண்ணுார்,:எண்ணுார், அன்னை சிவகாமி நகர் 9வது தெருவைச் சேர்ந்தவர் சிக்கந்தர், 40. இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கல்லாவில் இருந்த, 7,500 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் திருடு போயிருந்தன.
இது குறித்து, எண்ணுார் போலீசார் விசாரித்தனர். இதில் திருட்டில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த வாசு, 24, என்பவரை, நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ளன. விசாரணைக்கு பின், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
-
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் சாதனை: பிரதமர் பாராட்டு
-
பணியாளர்கள் 600 பேரை வெளியேற்றியது ஸொமேட்டோ
Advertisement
Advertisement