கட்டுமான பணிக்கு தடுப்பு வியாபாரிகள் எதிர்ப்பு

பண்ருட்டி : பண்ருட்டி பஸ் நிலைய வளாகத்தில் வணிக வளாக கட்டுமான பணிக்காக தடுப்பு அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
பண்ருட்டி நகராட்சி சார்பில் நகர்ப்புற கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4.75 கோடி ரூபாய் மதிப்பில் பஸ் நிலைய வளாகத்தில் வணிக வளாகம் கட்டும் பணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 21ம் தேதி அடிக்கல் நாட்டினார்.
கடலுார், விழுப்புரம் பகுதி பஸ்கள் நிற்கக் கூடிய இடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று தகடுகளால் தடுப்பு அமைக்கும் பணி நேற்று நடந்தது.
தடுப்புகள் அமைப்பதால் வியாபாரம் பாதிக்கப்படும் எனக் கூறி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து வியாபாரம் பாதிக்காத வகையில் கடைகள் இல்லாத இடத்தில் தடுப்புகள் அமைக்கும் பணி நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
-
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் சாதனை: பிரதமர் பாராட்டு
-
பணியாளர்கள் 600 பேரை வெளியேற்றியது ஸொமேட்டோ
Advertisement
Advertisement