இந்துஸ்தான் கல்லுாரியின் 20வது பட்டமளிப்பு விழா

கோவை; இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின், 20வது பட்டமளிப்பு விழா கல்லுாரி அரங்கில் நடந்தது.

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத்தலைவர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ஆயிரத்து 450 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

அவர் பேசுகையில், ''தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், மாணவர்களின் வளர்ச்சி இருக்க வேண்டும். நவீன யுகத்திற்கு ஏற்ப, தங்களைபுதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.சுயவளர்ச்சி மட்டுமின்றி, சமூக வளர்ச்சிக்கும் தங்களால் முடிந்ததை மாணவர்கள் செய்ய வேண்டும்,'' என்றார்.

சென்னை இந்திய தொழில்நுட்ப மையம் இயக்குனர் வைஜெயந்தி, இந்துஸ்தான் கல்வி மற்றும் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி, இணைச் செயலாளர் பிரியா, முதல்வர் ஜெயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement