இன்று ரம்ஜான் பண்டிகை; பள்ளிவாசல்களில் தொழுகை

கோவை; ஷவ்வால் பிறை நேற்று மாலை தெரிந்ததை அடுத்து, ஈது பெருநாளான ரம்ஜான் பண்டிகை, இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படும் என்று, கோவை மாவட்ட அனைத்து ஜமாத் அறிவித்துள்ளது.

இது குறித்து, கோவை மாவட்ட அனைத்து ஜமாத் பொதுசெயலாளர் முஹம்மதுஅலி அறிக்கை:

ஹிஜிரி 1446ம் ஆண்டின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தின், 29வது நாள் இன்று(நேற்று) (ஞாயிற்றுக்கிழமை) மாலை நிறைவு பெற்றதையடுத்து, நேற்று மாலை ஷவ்வால் மாத பிறை காணும் நிகழ்வு, அனைத்து ஜமாத் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெற்றன. ரத்தினபுரி நால்வர் லே அவுட் தாருல் குர் ஆன் சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில், நேற்று மாலை பிறைபார்க்கும் நிகழ்வு நடந்தது.

கோவை மாவட்ட அனைத்து ஜமாத் தலைவர் காஜா முஹைதீன், பொதுச்செயலாளர் முஹம்மது அலி உள்ளிட்ட நிர்வாகிகள், ஷவ்வால் பிறை பார்க்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும், கோவையிலும் ஷவ்வால் பிறை தெரிந்ததையடுத்து நாளை (இன்று) ஈது பெருநாள் கொண்டாடப்படும். பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெறும்.

இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement