பள்ளி - கல்லுாரி வித்தியாசம் 'தெரியாத' நெடுஞ்சாலைத்துறை

திருப்பூர், பல்லடம் ரோட்டில், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி செயல்படுகிறது. கல்லுாரி வாயிலில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பில், 'பள்ளி வளாகம் அருகே அமைந்துள்ளது; மெதுவாகச் செல்லவும்' என எழுதப்பட்டுள்ளது. அதற்கு சில மீட்டர் துாரத்தில், எல்.ஆர்.ஜி., கல்லுாரி என்ற அறிவிப்பு பலகை உள்ளது.
கல்லுாரி மாணவியர் கூறுகையில், 'கடந்த, 1971 முதல் இக்கல்லுாரி செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் முதல் அரசு கல்லுாரி இது தான். சென்னை குயின்மேரீஸ் கல்லுாரிக்கு அடுத்து, மாநிலத்தில் அதிகளவு மாணவியர் படிக்கும் கல்லுாரியாக எல்.ஆர்.ஜி., கல்லுாரி உள்ளது.
கல்லுாரி வாயிலில், பலர் பார்வைக்கு படும் வகையில் 'பள்ளி வளாகம் அருகே அமைந்துள்ளது' என நெடுஞ்சாலைத்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். விபரம் அறியாமல் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை மாற்ற வேண்டும். 'மகளிர் கல்லுாரி உள்ளது' என அறிவிப்பு வைக்க வேண்டும்,' என்றனர்.
மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்