சிவகங்கை நகராட்சி கடைக்கு ஏலம் நடக்காததால் நிதி இழப்பு
சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் தினசரி சந்தை ஏலம் வைப்பு தொகை அதிகம் என்பதால் கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் தயக்கம் காட்டுவதாலும், ஏலம் மூன்று முறைக்கு மேல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஏலம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிவகங்கை தினசரி சந்தையில் ரூ.3.49 கோடியில் 90 கடைகள் கட்டினர்.
பிப்., 6 மற்றும் 18, மார்ச் 5 ஆகிய மூன்று நாட்கள் ஏலம் விட முடிவு செய்தனர்.
கடைக்கு டெபாசிட் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என கூறியதால், வியாபாரிகள் பங்கேற்கவில்லை.
இதனால் டெபாசிட் தொகையை ரூ.50 ஆயிரமாக குறைத்தனர். அந்த ஏலத்திலும் வியாபாரிகள் பங்கேற்கவில்லை.
சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் கட்டிய 18 கடைகளும் ஏலம் விடப்படாமல் கிடப்பில் போட்டுள்ளதால், நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
Advertisement
Advertisement