நெடுமரம் மஞ்சுவிரட்டு 39 பேர் காயம்
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நெடுமரத்தில் நேற்று நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 35 பேர் காயமுற்றனர்.
நெடுமரம் மலையரசி அம்மன் கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 11:30 மணிக்கு தொழுவிற்கு வந்து பூஜைகள் நடத்தி மஞ்சுவிரட்டு துவங்கியது. தொழுவிற்கு வந்த 200 காளைகளில் 15 காளைகள் நிராகரிக்கப்பட்டது.
பங்கேற்க வந்த 53 மாடுபிடி வீரர்களில் 3 பேர் நிராகரிக்கப்பட்டு 50 பேர் பங்கேற்றனர். காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் உள்பட 39 பேர் காயமுற்றனர். கட்டுமாடுகளாக 200க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சூளகிரியில் வர்த்தக மையம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
-
கொல்கட்டா சென்ற கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு: 6 பேர் சிக்கினர்
-
வடை மாலை அணிந்த அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய ராமர்
-
வியாசர்பாடி மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
-
பேட்டரி திருடியோர் கைது
-
கொற்கை தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது
Advertisement
Advertisement