ஆலையில் தீ விபத்து

விருதுநகர் : விருதுநகரைச் சேர்ந்தவர் பிர்லா 55. இவருக்கு சொந்தமாக பெரியவள்ளிகுளத்தில் மரக்கரித்துாள் தயாரிப்பு ஆலை உள்ளது.

இந்த ஆலையில் நேற்று காலை 10:30 மணிக்கு கரி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் அரவை மிஷின்கள், மூட்டைகள் எரிந்து பாழானது. தீயணைப்புத்துறையினர் தீ பரவாமல் அணைத்தனர். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement