காளியம்மன் கோயில் பொங்கல் விழா
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி காளியம்மன் கோயில் பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இக்கோயில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை துவங்கியது. 2ம் நாள் நிகழ்ச்சியில் பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
விரதம் இருந்த பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆண்டிபட்டி பெருமாள் கோயிலில் அக்னி வளர்த்து தீச்சட்டி ஏந்திய பக்தர்கள் ஊர்வலமாக முனியாண்டி கோயில், மீனாட்சி அம்மன் கோயில் வழியாக சென்று காளியம்மன் கோயிலில் நேர்த்திக் கடனை முடித்தனர். பொங்கல் விழாவின் நிறைவு நாளில் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பொங்கல் விழாவில் ஆண்டிபட்டி, சுற்றுப் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கொல்கட்டா சென்ற கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு: 6 பேர் சிக்கினர்
-
வடை மாலை அணிந்த அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய ராமர்
-
வியாசர்பாடி மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
-
பேட்டரி திருடியோர் கைது
-
கொற்கை தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது
-
ஐ.பி.எல்., கிரிக்கெட் ரசிகர்களிடம் திருடிய 39 போன் மீட்பு; 8 பேர் கைது
Advertisement
Advertisement