தி.மு.க., நிர்வாகிகள்அ.தி.மு.க.,வுக்கு தாவல்
தி.மு.க., நிர்வாகிகள்அ.தி.மு.க.,வுக்கு தாவல்
கரூர்:கரூரில், தி.மு.க., நிர்வாகிகள் நேற்று, அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை கிழக்கு ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் செல்வகுமார், ஜெகதாபி பஞ்., கொடும்பூர் கிளை செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் அக்கட்சியில் இருந்து விலகி, மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர்
முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.அப்போது, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலர் தானேஷ் முத்துக்குமார், ஒன்றிய செயலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement