சென்னிமலை கோவிலில்ஏப்.,9ல் பங்குனி உத்திரதிருவிழா கொடியேற்றம்
சென்னிமலை கோவிலில்ஏப்.,9ல் பங்குனி உத்திரதிருவிழா கொடியேற்றம்
சென்னிமலை:ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களின் ஒன்றான, சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடப்பாண்டு பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் வரும், ௯ம் தேதி நடக்கிறது. 10ம் தேதி இரவு திருக்கல்யாணம்; 11ம் தேதி அதிகாலை தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை தேவஸ்தான மண்டபத்தில், அக்னி நட்சத்திர அன்னதான விழாக்குழு சார்பாக அன்னதானம்
நடக்கிறது.அன்று மாலை, 5:00 மணிக்கு தேர் நிலை சேரும். 12ம் தேதி காலை பரிவேட்டை, இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சி நடக்கிறது. 13ம் தேதி காலை மகாதரிசன நிகழ்ச்சி, இரவில் மஞ்சள் நீர் அபிஷேகத்துடன்
பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement