ரூ.12,000 லஞ்சம் பெற்ற உதவி இயக்குநர் கைது

நாகப்பட்டினம்:நாகை மாவட்டம், திட்டச்சேரியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 24.
வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் கடனுதவி கோரி, மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பித்தார்.
மாவட்ட தொழில் மைய பரிந்துரைப்படி, ஐ.ஓ.பி., வங்கியால் 5 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது. அரசு மானியமாக 1 லட்சத்து 25,000 ரூபாய் விடுவிக்க, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் அன்பழகன், 57, சதீஷ்குமாரிடம் 12,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
நாகை லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று சதீஷ்குமார் கொடுத்தபோது, அன்பழகனை, கையும் களவுமாக கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement