நாளை பள்ளிகள் செயல்படும்

திருப்பூர்; வரும், 24ம் தேதி வரை நடப்பு கல்வியாண்டு, தேர்வுகள் தொடருமென பள்ளிகளுக்கான நாட்குறிப்பு அட்டவணையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயில் காரணமாக தொடக்கப்பள்ளி தேர்வுகளை, வரும், 17க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது.

தேர்வு பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக, நாளை (5 ம் தேதி) பள்ளி வேலை நாள். அன்றைய தினம் அனைத்து அரசு பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் தெரிவித்தார்.

Advertisement