'வடமாநில தொழிலாளர்களைதினமும் கண்காணிக்க வேண்டும்
'வடமாநில தொழிலாளர்களைதினமும் கண்காணிக்க வேண்டும்'
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம், வெப்படை சுற்று வட்டாரத்தில், 100க்கு மேற்பட்ட நுாற்பாலைகள் உள்ளன. இங்கு, வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் வாடகைக்கு அறை எடுத்தும், சிலர் நுாற்பாலை வளாகத்திலும் தங்கியுள்ளனர். சில மாதங்களாக, வடமாநில தொழிலாளர்களால் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், வடமாநில தொழிலாளர்கள் குறித்து ஆலோசனை கூட்டம், நேற்று தனியார் திருமண மண்டபத்தில் திருச்செங்கோடு டி.எஸ்.பி., கிருஷணன் தலைமையில், பள்ளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் (பொ) தீபா முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் பள்ளிப்பாளையம் வட்டார நுாற்பாலை அதிபர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், டி.எஸ்.பி., கிருஷ்ணன் கூறியதாவது:வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கும் போது, அவர்களுடைய விபரம், முகவரி போன்றவை பதிவு செய்து பிறகே வேலைக்கு சேர்க்க வேண்டும். தினமும் வேலைக்கு வரும் போது வடமாநில தொழிலாளர்களை சோதனை செய்ய வேண்டும். நுாற்பாலையில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களுக்கு, அடையாள அட்டை வழங்க வேண்டும். அதில் மொபைல் எண், நிறுவனத்தின் பெயர் விபரங்கள் தெளிவாக இருக்க வேண்டும். நுாற்பாலையின் உள்ளேயும், வெளியிலும் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால், போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
மேலும்
-
மூன்றரை மாதங்களுக்குப் பிறகு காலணி அணிந்தார் அண்ணாமலை
-
குஜராத்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி; லக்னோவுக்கு 4வது வெற்றி
-
பொன்முடியின் ஆபாச பேச்சு: கவர்னர் கண்டனம்
-
பட்டா மாற்ற ரூ. 9 ஆயிரம் லஞ்சம்; திருச்செங்கோட்டில் சர்வேயர் கைது
-
மேற்குவங்க கலவரம்: தந்தை, மகன் வெட்டிக் கொலை;110 பேர் கைது
-
அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு; வெளியானது அறிவிப்பு