தேர்த்திருவிழா கோலாகலம்


தேர்த்திருவிழா கோலாகலம்


எலச்சிபாளையம்:எலச்சிபாளையம் அருகே, பெரியமணலியில் பிரசித்திபெற்ற கரிய காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கடந்த, 18ல் கம்பம் நடுதலுடன் விழா தொடங்கியது. 26ல், கிராம சாந்தி நடந்தது. 29ல், கொடியேற்றப்பட்டது. 1 மாலை, 4:00 மணிக்கு தீர்த்தக்குடம் எடுத்தல், சக்தி அழைத்தல் நடந்தது. 2 காலை, 6:00 மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டது.
அன்று மாலை, 5:00 மணிக்கு, கரிய காளியம்மன் திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு, மாரியம்மன் திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது.
நேற்று மாலை, 4:00 மணிக்கு, நாகேஸ்வரர் திருத்தேரும், 5:00 மணிக்கு, வேணுகோபாலசுவாமி திருத்தேரும் இழுக்கப்பட்டது.இன்று இரவு, 7:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட மின்விளக்கில் சத்தாபரணம் நடைபெறும். தொடர்ந்து, வாண வேடிக்கை, அம்மன் திருவீதி பவனி நடைபெறும். நாளை காலை, மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா முடிவடைகிறது.

Advertisement